tamilnadu

img

கொடுந்தொற்றுக் காலமும், கொடுமைக்கார அரசும் - ஜி.ராமகிருஷ்ணன்

சமூக வலைதளங்களில் மோடி அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீது வழக்கு தொடுக்கும் மத்திய அரசு, பொய்யான தகவல்களை வலைதளங்களில் பதிவிடும் சங்பரிவார அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்லாமல், அவர்களை பாதுகாத்தும் வருகிறது. 

குமரி முதல் இமயம் வரை எல்லா மாநிலங்க ளிலும், 16 மக்கள் கோரிக்கைகளை முன்னி றுத்தி மகத்தான இயக்கம் நடத்திட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அறை கூவல் விடுத்துள்ளது. 16 கோரிக்கைகள் என்பது, வெறும் வார்த்தைகள் அல்ல. கோடானுகோடி மக்களுடைய வாழ்வாதாரமும், வாழ்க்கையும் இந்த கோரிக்கைக ளுக்குள் அடங்கியுள்ளன.  அன்றாடம் வேலைக்குச் சென்றால் தான் வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலையில் உள்ள, ஏழை எளிய உழைக்கும் மக்களை பாதுகாக்கத்தான் இந்தப் போராட்டம். கடந்த ஆறு மாத காலமாக மத்தியில் ஆளும் பாஜக அரசு, கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி, அடுக்கடுக்காக மக்கள் மீது தொடுத்து வரும் தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகத் தான் இந்த 16 முழக்கங்கள். 

தொடரும் தாக்குதல்

கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி கடந்த ஐந்து மாத காலமாக தனது கடைந்தெடுத்த இந்துத் துவ செயல்திட்டத்தையும், மக்களையும் தேசப் பொரு ளாதாரத்தையும் நாசப்படுத்தும் நவீன தாராளமயப் பொரு ளாதாரக் கொள்கையையும், வேகவேகமாக அமலாக்கி வருகிறது மத்திய அரசு. மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்கள் ஏராளம். 

1    சுயசார்புப் பொருளாதாரக் கொள்கை என்று பிரதமர் அறிவித்தார். இது சுயசார்புக்கு எள்ளளவும் சம்பந்த மில்லாத, தனியார் துறைக்கு அடிமைச் சேவகம் செய்யும், கொள்கைகளே ஆகும். 

2   நாட்டினுடைய முதுகெலும்பாக விளங்கக்கூடிய உருக்கு உற்பத்தி, மின்னுற்பத்தி, எண்ணெய் எரிவாயு உற்பத்தி, நிலக்கரி உற்பத்தி, வங்கி, காப்பீட்டுத் துறை போன்ற, பொதுத்துறை நிறுவனங்களை மட்டுமல்ல, ரயில்வே துறையில் பயணிகள் போக்குவரத்தை இயக்கும் சேவையையும் கூட மத்திய அரசாங்கம் தனியார் கம்பெனிகளிடம் தாரை வார்த்துள்ளது. இப்படி கோடிகோடி யாக கார்ப்பரேட் கம்பனிகளுக்கு கொட்டிக் கொடுப்ப தைத்தான் சலுகைசார் முதலாளித்துவம் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். 

3    நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர்கள் மீதும் மத்திய அரசாங்கம் தாக்குதல் தொடுத்துள்ளது.  8 மணி வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியுள்ளது. கண்ணீரும், செந்நீரும் சிந்தி, போராடிப் பெற்ற உரிமை களைப் பறிக்கக்கூடிய வகையில், 13 மாநில அரசுகள் தொழிலாளர் நலச் சட்டங்கள் மூன்றாண்டுகளுக்கு அமலாகாமல் நிறுத்தி வைத்துள்ளன. மத்திய அர சாங்கம் ஏற்கனவே 40 தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக சுருக்கி, தொழிலாளர் உரிமை களைப் பறிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசு, தொழிலாளர்க ளுக்கு விரோதமாக, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதக மாக செயல்படும் இந்த அரசு ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவான அரசு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. 

4    இக்காலத்தில் மத ரீதியில் மக்களைப் பிளவுபடுத்திட, சிறு பான்மை மக்கள் மீது, பாஜக ஆர்.எஸ்.எஸ் தாக்குதல் தொடுத்து வருகின்றன. பல மாதங்களுக்கு முன்னதாக, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற, போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை, இப்போது கைது செய்து, மத்திய அரசு சிறையில் அடைக்கிறது. தில்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக, வழக்கு தொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள். வட கிழக்கு தில்லியில், சிறுபான்மை மக்கள்மீது சங்பரி வார அமைப்புகள் நரவேட்டை நடத்தின. ஆனால், தற்போது பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு தொடுத்து, மத்திய அரசு பழிவாங்கி வருகிறது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமரும், உத்தரப்பிரதேச மாநில முதல்வரும்  அயோத்தியாவில் ராமர் கோவிலுக்கு பூமி பூஜை போட்டிருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரோ, மாநில முதல்வரோ, மதங்களுக்கு அப்பாற் பட்டவர்கள் என்பதையெல்லாம் புறக்கணித்துவிட்டு, மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கத்தோடு அந்த நிகழ்ச்சியில் மோடியும், யோகி ஆதித்யநாத்தும் கலந்துகொண்டிருக்கிறார்கள். 

5    மக்கள் விரோதமாக செயல்படக்கூடிய மத்திய அரசாங் கத்தை விமர்சிப்பவர்கள் மீது, தேசத் துரோக வழக்கு போடப்படுகிறது. விசாரணை இல்லாமல் கைது செய்து சிறையில் அடைக்கக்கூடிய, சட்டவிரோத தடுப்பு நடவ டிக்கைச் சட்டமும், தேசியப் பாதுகாப்புச் சட்டமும், மத்திய அரசாங்கத்தை எதிப்பவர்களுக்கு எதிராகப்  பயன் படுத்தப்பட்டு அவர்கள் ஜாமீனில் வராதபடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். பீமா கோரேகான் வழக்கில், உண்மையான குற்றவாளி களான சங்பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு, சமூக ஆர்வலர்கள், அறிவுஜீவிகள் 11 பேரைக் கைது செய்து கடந்த 2 ஆண்டுகாலமாக சிறையில் அடைத்து வைத்துள்ளது. சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டபோதும், அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசாங்கம் மறுத்து வருகிறது. சமூக வலை தளங்களில் மோடி அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீது வழக்கு தொடுக்கும் மத்திய அரசு, பொய்யான தகவல்களை வலைதளங்களில் பதிவிடும் சங்பரிவார அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்காதது மட்டு மல்லாமல், அவர்களை பாதுகாத்தும் வருகிறது. 

6    இக்காலத்தில், மத்திய அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும், மாநிலங்களுடைய உரிமைகளைப் பறிப்பதாகவே உள்ளது. ஜிஎஸ்டி சட்டம் உருவாக்கப்பட்ட போது, மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளை, மத்திய அரசு ஐந்தாண்டுகளுக்கு ஈடுசெய்ய வேண்டும் என்ற  ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டன. ஆனாலும், சமீபத்தில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரி, மாநிலங்களுக்கு இழப்பீடு தர இயலாது என அறிவித்திருக்கிறார். இந்திய அரசியல் சட்டமென்பது அடிப்படையில், கூட்டாட்சி தன்மை கொண்டது. ஆனால், மாநிலங்களைப் புறக்கணித்து, எதேச்சதிகரமான ஒற்றை ஆட்சியை நிலைநாட்ட பாஜக அரசு முயற்சித்து வருகிறது.

7    இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கியுள்ள, தன்னாட்சி அதிகாரம் பெற்று சுதந்திரமாகச் செயல் படக்கூடிய அரசியலமைப்புச்சட்ட துறைகளும், அமைப்புகளும், சுயமாகச் செயல்படுவதற்குப் பதிலாக, அவற்றை தன்னுடைய கட்டுப்பாட்டில் பாஜக அரசு கொண்டு வருகிறது. நாடாளுமன்றம் புறக்கணிக் கப்படுகிறது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற  நிறுவ னங்களான சிபிஐ, தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, தணிக்கைத் துறை, அமலாக்கத் துறை, அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட் டுள்ளன. நீதித்துறை கூட சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் தள்ளாடி வருகிறது. சுயமாக செயல்பட வேண்டிய மத்திய புலனாய்வுத்துறை முகமை, தேசியப் புலனாய்வு மையம், அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகளை எல்லாம் மத்தியில் ஆளும் பாஜக வளைத்து, தன்னுடைய அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறது. அறிவிக்கப்படாத அவசர காலத்தைப் போல மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. 

8    மத்தியில் ஆளும் பாஜக அரசு, எதிர்க்கட்சிகள் ஆட்சி யில் உள்ள மாநிலங்களில் மக்கள் பிரதிநிதித்து வத்தைப் புறந்தள்ளி, ஆட்சியைக் கவிழ்த்து, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுகிறது.  ஏற்கனவே கர்நாட கத்தில் காங்கிரஸ், ஜனதா தளக் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்தது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி யை கவிழ்த்தது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு முயற்சித்து வருகிறது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு, அமலாக்கத் துறை யையும், சிபிஐயையும், மத்திய அரசாங்கம் பயன்படுத்து கிறது. 

9  கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையிலான இடது ஜனநாயக முன்னணி அரசை இழிவு படுத்த முயற்சித்து வருகிறது. தங்கக் கடத்தல் குற்றங்க ளை விசாரித்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுங்கத் துறை. மத்திய அரசின் அமைப்புகள் தங்கக் கடத்தல் விவகாரம் குறித்து சுதந்திரமாக விசாரணை மேற்கொள்ளட்டும் எனக் கேரள முதல்வர் தோழர். பினராயி விஜயன் நேர்மையாக அறிவித்த பிறகும், எந்த வகையிலும்  சம்பந்தப்படாத மாநில இடது ஜனநாயக அரசுக்கும், முதல்வருக்கும் எதிராக காங்கிரசும், பாஜகவும் கேரளத்தில் அவதூறு பரப்பி வருகின்றன. காலையில் பாஜக அறிக்கை விட்டால், அதே விஷ யங்களை மாலையில் காங்கிரஸ் கட்சி அறிக்கையாக வெளியிடுகிறது. இப்படி பாஜகவும், காங்கிரசும் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசை சீர்குலைக்க முயற்சித்து வருகின்றன. 

10     இக்காலத்தில், மோடி தலைமையிலான மத்திய அரசு, உலக அளவில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்து வரும் அமெரிக்காவுடைய இளைய பங்காளி யாக இந்தியாவை ஆக்கி வருகிறது. சீனா, கியூபா உள்ளிட்ட சோஷலிச நாடுகள் மீதும், ஈரான், வெனிசுலா உள்ளிட்ட வளரும் நாடுகள் மீதும், அமெரிக்க அரசு தொடுக்கக்கூடிய தாக்குதலுக்கு துணையாக நிற்கக் கூடிய அடிப்படையில், மத்திய பாஜக அரசின் வெளி யுறவுக் கொள்கை அமைந்துள்ளது.  

11     சுயசார்புக் கொள்கை என அறிவித்த மோடி அரசு விவசா யிகள் மீதும், விவசாயத் தொழிலாளிகள் மீதும் தாக்குதல் தொடுத்துள்ளது. அத்தியாவசியப் பொருள் பாதுகாப்பு சட்டத்திருத்தம், வேளாண் ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டி சட்டத்திருத்தம் போன்று மத்திய அரசு பிறப் பித்துள்ள  மூன்று அவசரச் சட்டங்கள் விவசாயிகளை யும், விவசாயத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது. விவ சாய ஒப்பந்தச் சட்டம் என்பது எதிர்காலத்தில் விவசாயி கள் விவசாயத்தையே கார்ப்பரேட்டுகளிடம் அடகு வைக்கக்கூடிய மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும். 

12    இந்தியாவினுடைய இயற்கை மற்றும் கனிம வளங்களை உள்நாட்டு, பன்னாட்டுக் கம்பெனிகள் கொள்ளை அடிக்கக்கூடிய கொள்கைகளை அறிவித்ததோடு, மத்திய அரசாங்கம் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை சட்டமானால், விவசாயம், சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மக்களின் குறிப்பாக ஆதிவாசி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். 

13    நாடாளுமன்ற நிலைக்குழுவில் புதிய கல்விக் கொள்கை நகல் அறிக்கை மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  எழுத்துப்பூர்வமாக கடும் ஆட்சேபணையை தெரி வித்தது. ஆனால் தற்போது புதிய கல்விக் கொள்கையை அறிவித்து அமலாக்கத் தொடங்கிவிட்டது. கல்வி என்பது மத்திய மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்றக் கூடிய வாய்ப்புள்ள கல்வியை மத்திய அரசாங்கம் முழுக்க முழுக்க தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள புதிய கல்விக் கொள்கை முயற்சிக்கிறது. இந்தக் கல்விக் கொள்கை சுயநிதி கல்வி நிலை யங்கள் கட்டணங்களை அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது. இது போல பல ஆபத்தான அம்சங்களைக் கொண்ட இந்தக் கல்விக் கொள்கை கல்வியை தனியார் மயமாக்குவதோடு, காவி மயமாக்கவும் வழிவகுக்கும்

14    ஒட்டு மொத்தமாக கடந்த ஆறு மாத காலத்தில், மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள நடவடிக்கைகள் கொள்கை கள் நாட்டில் உள்ள உழைக்கும் மக்களுடைய வாழ்வா தாரத்தையும் வாழ்க்கையையும் கடுமையாக நாசப் படுத்தக்கூடியது. இந்தப் பின்னணியில் தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழ்கண்ட கோரிக்கைக ளை முன்வைத்து போராட்ட இயக்கத்தை அறி வித்துள்ளது. 

ஆகஸ்ட் 20 முதல் 26 வரை மாநிலம் முழுவதும், கிராமங்களிலும், நகரங்களிலும் மகத்தான இயக்கத்தை முன்னெடுத்துச்செல்வோம். 

கட்டுரையாளர் : அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)